Thursday, April 25, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் 2 இளைஞர்களின் பொக்கட்டுக்குள் சிக்கிய ஒரு கோடி ரூபாய் - அதிர்ச்சியில் மயங்கிய பொலிஸார்...

யாழில் 2 இளைஞர்களின் பொக்கட்டுக்குள் சிக்கிய ஒரு கோடி ரூபாய் – அதிர்ச்சியில் மயங்கிய பொலிஸார் !

யாழ்ப்பாணம் – தீவகம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டுக்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 60 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.இதன் பெறுமதி 1 கோடி ரூபாயை தாண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது:

யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி நிகால் பிரான் தலைமையிலான அணியினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் பகல் நேரங்களில் பல்வேறு வீடுகளை உடைத்துத் திருடிய குற்றச்சாட் டுக்களுக்காக மேற்படி இரு சந்தேக நபர்களும் யாழ்ப்பாணம் மாவட்டக் குற் றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான இரு சந்தேக நபர்களும் கொட்டடிப் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் முறையே 20 மற்றும் 22 வயதுடையவர்கள். சந்தேகநபர்கள்ளுக்கு எதிராக 16 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், இவர்களிடம் இருந்து திருட்டு நகையைக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் மேலும் இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட விசாரணைகளின் அடிப்ப டையில், வேலணையில் 20 பவுண், வங்களாவடியில் ஏழரைப் பவுண், மிருசுவிலில் 13 பவுண், புங்குடுதீவில் 3 பவுண், முழங்காவிலில் 11 பவுண் மற்றும் காரைநகரில் வீடுடைத்து இடம் பெற்ற திருட்டு உள்ளிட்ட வேறு பல திருட்டுக்களுடனும் தொடர்புள்ளதாகத் தெரிய வந்துள்ளதுடன், அதை சந்தேகநபர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள். அவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments