Friday, April 19, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் 14 வயது சிறுமியை தாயாக்கிய 73 வயது தாத்தா!

யாழில் 14 வயது சிறுமியை தாயாக்கிய 73 வயது தாத்தா!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் என்ற சந்தேகத்தின் பேரில் 73 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி அங்கு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

கைது செய்யப்பட்ட முதியவர் சிறுமி வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், அவர் சிறுமியுடன் நெருங்கியவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments