Thursday, March 28, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் வேலை பார்த்து விட்டு வரும் பெண்களின் கையை பிடித்து இழுத்த 20 வயது இளைஞன்...

யாழில் வேலை பார்த்து விட்டு வரும் பெண்களின் கையை பிடித்து இழுத்த 20 வயது இளைஞன் கைது!

யாழில் பெண்ணின் கையை இழுத்த ஆண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த நபர் மது போதையில் பெண் ஒருவரின் கையை பிடித்து இழுத்துள்ளமை தெரிய வந்துள்ளது.

நேற்று மாலை பெண்கள் இருவரும் புத்தகக் கடையில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவர்கள் அராலி மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. குறித்த நபர் அந்த பகுதியை சேர்ந்த 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பெண்கள் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் குறித்த நபரின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று தேடிய போது அவர் தலைமறைவானது தெரிய வந்தது.

குறித்த நபரை இன்று (23) காலை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸார் அவரது உறவினர்களை எச்சரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments