சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏழாழை பகுதியில் நேற்று இரவு வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு தனியாக வசித்திருந்த இரண்டு முதியவர்களுடைய வீடே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்ட சந்தர்பத்தில் முதியவர்கள் இருவரும் அயல்வீட்டில் தங்கியிருந்தனர்.
நீண்ட காலங்களாக இரு குழுக்களிடையே ஏற்பட்டிருந்த பிரச்சினையே தீ வைப்புக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.