யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது யாழ்ப்பாணம் – கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த பகுதியை சேர்ந்த க.செறிஸ்டன் (வயது 49) என்ற இளைஞர் என தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளானது வேகக்கட்டுபாட்டை இழந்த நிலையில் அருகில் உள்ள மின் கம்பத்தினுடன் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.