Saturday, April 20, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் மீன்பிடியில் ஈடுபட்டு மாயமான இளைஞன் சடலமாக மீட்பு !

யாழில் மீன்பிடியில் ஈடுபட்டு மாயமான இளைஞன் சடலமாக மீட்பு !

யாழில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காணமல்போன நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழில் , அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை பாலத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்று (22) மாலை சில இளைஞர்கள் தூண்டிலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இளைஞன் ஒருவன் வழுக்கி விழுந்ததாகவும், ஏனையோர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மிகுற்த தேடுதலுக்கு பின் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புத்தூர் கலைமதி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் என தெரிவித்துள்ளனர்.

தப்பியோடியவர்களில் மூன்று இளைஞர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments