Thursday, April 25, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் மீண்டும் பலாலி விமான நிலைய சேவைகள் ஆரம்பம்!

யாழில் மீண்டும் பலாலி விமான நிலைய சேவைகள் ஆரம்பம்!

பலாலி விமான நிலைய சேவை இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் இன்று காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு விஜயம் செய்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தார்

நாட்டிற்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தந்த காங்கேசன் துறைமுகம், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அழிந்துவிட்டதாகவும், தற்போது அது பாவனையில் இல்லை எனவும். இவ்வாறான சம்பவங்களால் எமது நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

அந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால் காங்கேசன்துறை போன்ற பொருளாதார ரீதியில் இலாபகரமான இடங்களை புனரமைப்பதன் மூலமே நாட்டுக்கு வருமானம் கிடைக்கும்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த வேலைத்திட்டத்தில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். அதன் காரணமாக இன்று காங்கேசன் துறைமுகத்திற்கு அமைச்சர் என்ற முறையில் நேரடியாக விஜயம் செய்து இங்கு மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் அமுல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றேன்.

குறிப்பாக இந்தியாவின் உதவியையும் நாடுகிறோம். ஏற்கனவே இந்தியாவின் உதவியுடன் சில வேலைத் திட்டங்களை இங்கு மேற்கொண்டு வருகிறோம். ஆனால் இங்கு பல வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன, இது போன்ற வேலைத் திட்டங்களை விரைவில் தொடங்கி, இந்த கங்கேசன் துறைமுகத்தை மிக விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம்.

அதேபோன்று பலாலி சர்வதேச விமான நிலையம் எமக்கு வருமானம் ஈட்டக்கூடிய விமான நிலையம், இன்னும் ஓரிரு மாதங்களில் விமான நிலையம் செயல்படத் தொடங்கும், குறிப்பாக அந்த விமான நிலையத்தை செயல்படுத்த இந்தியா தடையாக உள்ளது என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது முதலில் சிக்கல் ஏற்பட்டது. எல்லாம் விவாதிக்கப்பட்டு சமரசம் செய்யப்பட்டு இப்போது அனைத்து பிரச்சினைகளும் முடிந்துவிட்டன. இன்னும் ஓரிரு மாதங்களில் பலாலி விமான சேவையும் ஆரம்பிக்கப்படும்.

இதனை ஆரம்பிக்கும் பட்சத்தில் இலங்கையில் உள்ள மூன்று இன மக்களும் குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இவை விரைவில் சாத்தியப்பட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்றும் கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments