நல்லூர் திருவிழாவின் போது யாழ். வீதி விதிகளை மாநகர சபையின் விசேட குழு கண்காணிக்கும் எனவும், அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
ஈஸ்டர் குண்டுவெடிப்பு மற்றும் கோவிட் தொற்று காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடத்தப்பட்ட நல்லூர் மஹோத்ஸவம் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது.