Thursday, April 25, 2024
Homeஇலங்கை செய்திகள்யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய 23 வயது இளைஞன்.

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய 23 வயது இளைஞன்.

போதைப்பொருள் மாத்திரைகளுடன் மல்லாகம் பகுதியில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் பலாலி விமானப்படை புலனாய் பிரிவுகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறைத்த இளைஞன் 250 போதைப்பொருள் மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டார்.

கைதானவர் ஏழாலை தெற்கைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைதான சந்தேக நபர் நாளைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் காவல்துறையினரால் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments