யாழ்.நகரில் உள்ள உணவகங்களில் இன்று பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையின் விளைவாக தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டதுடன் சுகாதார மீறல்கள் குறித்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று சனிக்கிழமை நகரில் அமைந்துள்ள உணவகங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.
குளிர்சாதனப் பெட்டியில் சுகாதாரமற்ற வகையிலும், தீங்கு விளைவிக்கும் வகையிலும் வைக்கப்பட்டிருந்த மீன், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டன.
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் கலர் கலப்படத்துடன் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களும் அழிக்கப்பட்டன.
மேலும், ஊழியர்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து உணவக உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டதுடன், இரண்டு வாரங்களுக்குள் அனைத்தையும் சரி செய்யாவிட்டால் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.