யாழ் நகரம் ஒவ்வொரு வருடமும் தீபாவளிப் பண்டிகையின் முதல் நாளின் போது சனக்கூட்டத்தால் நிரம்பி வழியும்.
இந்த நிலையில், நேற்று மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது.
புடவைக் கடைகள் மற்றும் ஏனைய கடைகளிலும் பொதுமக்களின் வரவு குறைவாக காணப்படுகின்றது. அத்துடன் அங்காடி வியாபாரமும் எதிர்பார்த்த அளவுக்கு களைகட்டவில்லையென வியாபாரிகள் தெரிவித்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் சிக்கிதவிப்பதனால் இம்முறை தீபாவளி கொண்டாட்டங்கள் சோபை இழந்து காணப்படுகின்றது.