யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நீர்வேலியில் வீட்டில் வைத்து கசிப்பு காச்சியபோது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
40 வயதுடைய பெண் ஒருவரும் 35 வயதுடைய ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர்
இதன்போது 20 லீற்றர் ஜீன் மற்றும் 50 லீற்றர் கொடா கின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் சாட்சியங்களையும் கோப்பாய் பொலிஸார் கையளித்துள்ளனர்.