கோப்பாய் பகுதியில் 210 லீற்றர் கொடாவுடன் 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கோப்பாய் பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டதுடன் சந்தேக நபரை கோடாவுடன் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.