Saturday, April 20, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர்!

யாழில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர்!

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்ட வாய்த் தகராறு காரணமாக காயமடைந்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர் மத்தடி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில், அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அண்மைக்காலமாக இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments