Friday, March 29, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் கசிப்புடன் இரண்டு பெண்கள் கைது!

யாழில் கசிப்புடன் இரண்டு பெண்கள் கைது!

யாழில் கசிப்புடன் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் கங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

16 லிட்டர் கசிவுடன் 27 வயது பெண்ணும், 5 லிட்டர் கசிவுடன் 42 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

மீட்கப்பட்ட கசிவுடன் கைது செய்யப்பட்டவர்கள் இளவாலை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments