யாழ்ப்பாணத்தில் இருந்து வாகனத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 29 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பளை – முகமாலை பகுதியில் பொலிஸ் வாகனம் ஒன்றை மறித்த பொலிஸார், வாகனத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை கண்டுபிடித்துள்ளனர்.
வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 29 கிலோ 150 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக கஞ்சா கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.