Friday, April 19, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் இருந்து சென்னைக்கு செல்லும் விமான சேவையின் முழு விவரம்!

யாழில் இருந்து சென்னைக்கு செல்லும் விமான சேவையின் முழு விவரம்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் சென்னைக்கான விமான சேவை ஆரம்பிக்கப்படும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த விமான சேவைகள் வரும் 12ம் தேதி முதல் தொடங்கப்படும். யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு வாரத்திற்கு நான்கு விமானங்கள் இயக்கப்படும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து புறப்படும் விமானம் காலை 10.50 மணிக்கு பலாலி விமான நிலையத்தை வந்தடைந்து இரவு 11.50 மணிக்கு பலாலி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்படும்.

இதேவேளை, பலாலி சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பலாலி சர்வதேச விமான நிலையம் 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அதன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. மேலும், சில இந்திய விமான நிறுவனங்கள் சேவைகளை மீண்டும் தொடங்க தயாராக இருப்பதாகவும் ஆனால் சில தொழில்நுட்ப சிக்கல்கள் சவாலாக இருப்பதாகவும் அரசாங்கம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments