ஜார்கண்டில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தால் உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்த நிகழ்வுகள் இன்று (10-01-2023) காலை தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
இந்தி படிப்பை முடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் இந்தி மொழி அடிப்படையிலான கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
யாழ். இந்திய துணைத் தூதுவர் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தூதரக அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.