Thursday, April 18, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் ஆசை வார்த்தைகள் பேசி இரு இளைஞர்களை ஏமாற்றிய பெண்!

யாழில் ஆசை வார்த்தைகள் பேசி இரு இளைஞர்களை ஏமாற்றிய பெண்!

கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பணத்தை ஏமாற்றியதாகக் கூறி பெண்ணொருவருக்கு எதிராக இரண்டு இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பந்ததாரிப்பு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த ஏப்ரல் மாதம் கனடாவுக்கு அனுப்ப ஆசைப்பட்டு பணத்தை பெற்று 7 மாதங்கள் கடந்தும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.

அந்த நிலையில், பணத்தைத் திருப்பித் தருமாறு அவரிடம் கேட்டபோது, ​​கொழும்பில் உள்ள முகவர் ஒருவரிடம் பணத்தைக் கொடுத்ததாகவும், தற்போது தனது தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொடுத்த பணத்தை அவரிடம் இருந்து திருப்பி தருமாறு அந்த இளைஞர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சண்டிலிப்பாய், சங்கானை பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களில் ஒருவர் 55 இலட்சம் ரூபாவையும் மற்றையவர் 44 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவையும் குறித்த பெண்ணிடம் வழங்கியதாக பொலிஸார் கூறியமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments