யாழ்ப்பாணம் மாவட்டம் – இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையகப் பகுதியில் உள்ள வீடொன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று (18-11-2022) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் அறிய,
குறித்த வீட்டிற்குள் நுழைந்த 7 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்தவர்கள் அணிந்திருந்த நகைகளை அச்சுறுத்தி கொள்ளையடித்துள்ளனர்.
ஒரு பவுன் நகை, ஒரு ஜோடி மோதிரம் உள்ளிட்டவை திருடப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.