Friday, April 19, 2024
Homeயாழ்ப்பாணம்யாழிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற சிறுமி! அநாதரவான நிலையில் மீட்பு!!

யாழிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற சிறுமி! அநாதரவான நிலையில் மீட்பு!!

யாழில் ரிக்ரொக் செயலி மூலம் காதல் வசப்பட்ட சிறுமியொருவர் காதலனை சந்திப்பதற்காக திருகோணமலைக்கு சென்று அங்கு அநாதரவாக விடப்பட்ட நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவை சேர்ந்த சிறுமியொருவரே இவ்வாறு மீட்கப்பட்டார்.

14 வயதான சிறுமி ரிக்ரொக் செயலி மூலம் மலர்ந்த காதல் காரணமாக, காதலனை சந்திப்பதற்காக திருகோணமலைக்கு சென்றுள்ளார்.

அங்கு காதலன் வருகை தராத நிலையில் அநாதரவாக நின்ற சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.

காதலனை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments