அனுராதபுரம் ஹிட்டோகம திபுல்வெவ குளத்தில் மூழ்கி யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாதுக்க வடரெக்க பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
நேற்று அனுராதபுரத்திற்கு வந்த (26) யாத்திரிகர்கள் குழுவொன்று மதியம் திபுல்வெவ குளத்திற்கு அருகில் நீராடச் சென்றுள்ளனர்.
இதற்கிடையில் யுவதி நீரில் மூழ்கினார். பின்னர், பிரதேசவாசிகள் சிறுமியை மீட்டு நெலுபேவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிட்டோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.