Friday, April 19, 2024
Homeஇந்திய செய்திகள்மொபைல் வெடித்ததில் பரிதாபமாக பலியான சிறுமி ! எச்சரிக்கை பதிவு !

மொபைல் வெடித்ததில் பரிதாபமாக பலியான சிறுமி ! எச்சரிக்கை பதிவு !

இந்தியாவின் கேரளாவில் மொபைல் போன் வெடித்ததில் 8 வயது சிறுமி உயிரிழந்தார்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை பட்டிப்பரம்ப குன்னத் வீட்டைச் சேர்ந்தவர் அசோகுமார். இவரது மகள் ஆதித்யஸ்ரீ (வயது 8) மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ஆதித்யஸ்ரீ நேற்று இரவு தனது மொபைலில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக செல்போன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் பேட்டரி பழுதானதால் செல்போன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.

இப்போதெல்லாம் குழந்தைகள் பொதுவாக மொபைல் போன்களில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் அவர்களின் உயிரை பறிக்கிறது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மொபைல் போன் கொடுப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments