தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகத் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (18.05.2023) முள்ளிவாய்க்காலில் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்த நினைவேந்தலில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறுவதற்காக அவர்களின் உறவினர்களும் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த மக்களும் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.
இதனை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.