Friday, March 29, 2024
Homeவன்னி செய்திகள்முல்லைத்தீவு செய்திகள்முல்லைத்தீவு மக்களை சந்தித்து பேசிய எம்.பி!

முல்லைத்தீவு மக்களை சந்தித்து பேசிய எம்.பி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பாண்டியன்குளம் கரும் புள்ளியான் கிராம மக்களின் கோரிக்கைக்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் மக்கள் சந்திப்பு இன்று மாலை நடைபெற்றது.

இதன் போது தற்போதைய நாட்டின் பொருளாதார நிலமை மற்றும் அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதோடு, கிராமத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன்படி புலம்பெயர் தேசத்தில் இருந்து வருகை தந்திருந்த குறித்த கிராமத்தைச் சேர்ந்த ராசன் அவர்களினால் மூன்று குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிக்காக காசோலைகளும் வழங்கப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments