Wednesday, April 24, 2024
Homeவன்னி செய்திகள்முல்லைத்தீவு செய்திகள்முல்லைத்தீவில் பெற்றோல் திருடும் போது வெளிச்சம் போதவில்லையென தீக்குச்சியை பற்ற வைத்த : 17...

முல்லைத்தீவில் பெற்றோல் திருடும் போது வெளிச்சம் போதவில்லையென தீக்குச்சியை பற்ற வைத்த : 17 வயது சிறுவன் வைத்தியசாலையில்!

முல்லைத்தீவில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் எரிபொருள் திருடிய திருடன், வெளிச்சமில்லையென தீக்குச்சியை பற்ற வைத்ததால் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமாகியுள்ளது.

தீவிபத்தில் காயமடைந்த திருடன் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டான்.

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, றெட்பானா, மாணிக்கபுரம் பகுதியில் இந்த சம்பவம், கடந்த 10ஆம் திகதி இரவு இடம்பெற்றது.

17 வயதான இளைஞன் ஒருவன், அன்று இரவு வீடொன்றிற்குள் நுழைந்து, மோட்டார் சைக்கிளில் பெற்றோல் திருடியுள்ளான். பெற்றோலை உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்த போது, போதிய வெளிச்சமில்லையென தீக்குச்சியை பற்ற வைத்துள்ளான். அது பெற்றோலில் பரவி மோட்டார் சைக்கிள் தீப்பற்றியது.

தீ விபத்தில் இளைஞனும் காயமடைந்தான். காயத்துடன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.

தீ விபத்தினால் வீட்டிலிருந்தவர்கள் எச்சரிக்கையடைந்து, அயலவர்களுடன் உதவியுடன் அந்த பகுதியை சுற்றிவளைத்து தேடியதில், கைவிடப்பட்ட வீடொன்றிற்குள் திருடன் பதுங்கியிருந்த நிலையில் பிடிக்கப்பட்டான்.

திருடன் புதுக்குடியிருப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். மோட்டார் சைக்கிளும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

திருடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளான்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments