Thursday, April 18, 2024
Homeவன்னி செய்திகள்முல்லைத்தீவு செய்திகள்முல்லைத்தீவில் கடற்தொழில் திணைக்கள அலுவலகம் முற்றுகை!

முல்லைத்தீவில் கடற்தொழில் திணைக்கள அலுவலகம் முற்றுகை!

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறு கோரி தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இன்று (03.10.2022) காலை ஆறு மணிக்கு நீரியல்வளத் துறை அலுவலகம் முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சங்கம் என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தன.

முல்லைத்தீவில் உள்ள நீரியல்வள திணைக்கள அலுவலகம் முற்றுகையிடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், முல்லைத்தீவு கடற்கரை வீதியில் உள்ள கடல்சார் நீரியல் திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்து தமக்கான தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தகவல் – வன்னியன்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments