Thursday, April 25, 2024
Homeவன்னி செய்திகள்முல்லைத்தீவு செய்திகள்முல்லைத்தீவில் கண்ணிவெடி அகற்றும் பணியாளரான இளம் குடும்ப பெண்ணுக்கு நடந்த கொடுமை ! அதிர்ச்சியில்...

முல்லைத்தீவில் கண்ணிவெடி அகற்றும் பணியாளரான இளம் குடும்ப பெண்ணுக்கு நடந்த கொடுமை ! அதிர்ச்சியில் ஊர்மக்கள் !

முல்லைதீவில் கண்ணிவெடி அகற்றும் இளம் குடும்ப பெண் பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

முல்லைதீவில் கொக்குளாய் – மணலாறு பகுதியில் உள்ள காட்டில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட பெண் ஒருவர் அங்கு வந்த இனந்தெரியாதோரால் பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குறித்த பெண்ணை இனந்தெரியாத இருவர் தூக்கி சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சி செய்துள்ளார்கள்.

எப்படியோ தப்பித்த குறித்த பெண் கூக்குரலிட்டுள்ளார், சற்று தூரத்தில் இருந்த மற்றய பணியாளர்கள் உடனே அந்த இடத்திற்கு வந்துள்ளார்கள்.

இனந்தெரியாத குற்றவாளிகள் இருவரும் காட்டுக்குள் தப்பி சென்றுள்ளார்கள்,

பணியாளர்களால் மீட்கப்பட்ட குறித்த பெண் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலியல் துஸ்பிரயோகம் செய்ய வந்தவர்கள் இருவரும் காலில் சப்பாத்து அணிந்தவர்கள் என குறித்த பெண் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments