முகத்தின் நிறமாற்றத்தை சரிசெய்ய பல ப்ளீச்சிங் முறைகள் உள்ளன, ஆனால் ரசாயன முறைகள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்நிலையில் முகத்தில் அக்கறை இருந்தால் வீட்டிலேயே எளிய முறையில் இயற்கையான ப்ளீச்சிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
முதலில் புளியை வெந்நீரில் ஊறவைத்து நன்றாக பிழிந்து சாறு எடுக்கவும். அதில் எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், அரிசி மாவு மற்றும் தேன் கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்
அதன் பிறகு, முகத்தை நன்கு கழுவி, புளி கலவையை எடுத்து, உங்கள் முகம் முழுவதும் தடவவும். சில நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவவும், அதை துடைக்க ஒரு டவலை எடுத்துக் கொள்ளவும். இதையே சில வாரங்கள் செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமையைப் போக்கி அசல் நிறத்தைப் பெறலாம்.