இன்று காலை 8.00 மணி நிலவரப்படி நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இன்று இலங்கையின் சில பகுதிகளில் காற்றின் தரம் 190க்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி கொழும்பில் 191, பதுளை 169, கேகல 155, களுத்துறை 146, கண்டி 126, இரத்தினபுரி 114, குருநாகல 106, காலி 97 என காற்றின் தர சுட்டெண் பதிவு செய்யப்பட்டுள்ளது.