Saturday, April 20, 2024
Homeஇலங்கை செய்திகள்மின் கட்டணத்தை செலுத்த தவறிய வைத்தியசாலைகள்! மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு!

மின் கட்டணத்தை செலுத்த தவறிய வைத்தியசாலைகள்! மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு!

சுகாதார அமைச்சு மற்றும் கொழும்பில் உள்ள பல வைத்தியசாலைகள் மின்சார கட்டணத்தை செலுத்தவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனங்களிடமிருந்து சபைக்கு செலுத்த வேண்டிய மொத்தத் தொகை 400 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு, கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு பல் வைத்தியசாலை, கொழும்பு கண் வைத்தியசாலை, காசல் வீதி மகளிர் வைத்தியசாலை, பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, தேசிய இரத்த மாற்று சிகிச்சை நிலையம் உள்ளிட்ட பல நிறுவனங்களிடமிருந்து இந்தத் தொகை அறவிடப்பட வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அனைத்து சுகாதார நிறுவனங்களும் மாதாந்தம் 100 மில்லியன் ரூபா மின்சாரக் கட்டணத்தைப் பெறுவதாக இந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தொகையை செலுத்துமாறு பல தடவைகள் மின்சார சபை இந்த நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments