Thursday, April 25, 2024
Homeஇலங்கை செய்திகள்மின்வெட்டு குறித்து இலங்கை மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

மின்வெட்டு குறித்து இலங்கை மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நாட்டு மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (27-11-2022) தெரிவித்தார்.

இலங்கையில் 2022 பெப்ரவரி மாதம் முதல் தினசரி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது, ஒரு கட்டத்தில் 13 மணி நேரம் மின்வெட்டு நீடித்தது, அது தற்போது ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரமாக குறைந்துள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், கடந்த சில மாதங்களில் மின்வெட்டை பெருமளவு குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எவ்வாறாயினும், மின் கட்டணத்தை திருத்தியமைக்காமல் செய்ய முடியாது என சுட்டிக்காட்டிய அவர், ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மின் கட்டணத்தை திருத்தியமைப்பது நல்லது எனவும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments