மின் கட்டணச் சீர்திருத்தத்துடன் கூடிய விலைச் சூத்திரத்தைத் தயாரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இன்றைய (09-01-2023) அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், பொருத்தமான விலைச் சூத்திரத்திற்கான முன்மொழிவை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த பின்னர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும்.