Saturday, April 20, 2024
Homeஇலங்கை செய்திகள்மாணிக்க கல் தேடும் பணியில் ஈடுபட்ட நபர் மீது மண் சரிந்து வீீழுந்ததில் பரிதாபமாக பலி!

மாணிக்க கல் தேடும் பணியில் ஈடுபட்ட நபர் மீது மண் சரிந்து வீீழுந்ததில் பரிதாபமாக பலி!

மாணிக்க கற்களை தேடும் நோக்கில் சுரங்கத்தை வெட்டிக் கொண்டிருந்த ஒருவர் சுரங்கத்தில் மண் குவியல் சரிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

நேற்று (20) பிற்பகல், வேவல்வத்தை, தெமோதர பிரதேசத்தில் ஹபுகஸ்தான தோட்டத்திற்கு சொந்தமான காணியில் குறித்த நபர் அகழ்வு செய்து கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இரத்தினபுரி கல்லலெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சுரங்கத்தில் எட்டு அடி ஆழத்தில் குழி ஒன்றை தோண்டிய போது மண் குவியல் ஒன்று அவர் மீது விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் கல்லேல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வேவல்வத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments