மன்னார் சிலாவத்துறை பாடசாலையில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவனுடன் மாணவனின் தந்தையும் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகனுடன் ஓடத் தொடங்கிய தந்தை இறுதிக் கோடு வரை ஓடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது மகன் எப்படியாவது இலக்கிளை அடைவேண்டும் என்பதற்காக அவரும் ஓடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் மாணவனின் தந்தையான யூசுப் இர்பான் ஒரு ஏழை மீனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வெற்றி பெற்ற மாணவனையும், தந்தையையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.