மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களை தலைமைத்துவப் பயிற்சியின் மூலம் எதிர்காலத் தலைவர்களாக மாற்றும் செயற்திட்டம் மெசிடோ நிறுவனத்தினால் அதன் பணிப்பாளர் ஜட்சன் பிகிரடோ தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மன்னார் முருங்கன் டொன்போஸ்கோ கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இளைஞர், யுவதிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சி, பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் தொழில் முனைவோரை வளர்க்கும் பயிற்சி, போதைக்கு அடிமையாத மகிழ்ச்சியான குடும்பச் சூழலைக் கட்டியெழுப்பும் பயிற்சி போன்றவை.