மன்னார் மடு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
32 வயதுடைய ஏகாம்பரம் சுகிர்தன் (சின்னா) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மன்னார் மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தட்சணமருதமடு பகுதியில் நேற்று (25-03-2023) இரவு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் அறிய,
4 இளைஞர்கள் தட்சணமருதமடு அருகே உள்ள காட்டில் வேட்டையாடத் தயாராகி, நாட்டுத் துப்பாக்கியுடன் (இடியன்) ஊரில் உள்ள நண்பரை அழைக்கச் சென்றனர்.
அப்போது வேட்டைக்கு செல்ல தயாராக இருந்த 4 பேரில் இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் வாக்குவாதம் முற்றிய நிலையில் தகராறில் ஈடுபட்ட மற்றொருவரை அடிக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக இடியனின் கைப்பிடி வெடித்து சிதறியதில், கையில் இடையனை பிடித்திருந்த சின்னா என்ற இறந்தவர் படுகாயம் அடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் இளைஞரை பெரியபாண்டிவிரிச்சான் மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கிருந்து அம்புலன்ஸ் மூலம் மத்திய மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மடு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.