Thursday, April 25, 2024
Homeஇந்திய செய்திகள்மனைவி வீட்டில் இல்லாத போது 54 வயது மாமியாரை வல்லுறவிற்குள்ளாக்கிய 28 வயது மருமகன் கைது!

மனைவி வீட்டில் இல்லாத போது 54 வயது மாமியாரை வல்லுறவிற்குள்ளாக்கிய 28 வயது மருமகன் கைது!

இரவு இசை நிகழ்ச்சியை காண அவரது மனைவி சென்றிருந்த போது மாமியாரை வல்லுறவுக்கு உட்படுத்திய நபரை சபுகஸ்கந்த பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் தனது மனைவியுடன் மாபிம பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளார். கல்நேவ பிரதேசத்தில் வசிக்கும் மனைவியின் தந்தை மற்றும் தாயார் நேற்று முன்தினம் இந்த வீட்டிற்கு வந்திருந்தனர். தாய் அந்த வீட்டிலேயே தங்கியிருக்க, தந்தையார் ஊருக்கு திரும்பியிருந்தார்.

அன்றைய தினம் இரவு நடந்த இசை நிழ்ச்சியை பார்வையிட மனைவி தனது நண்பிகளுடன் சென்றார். வீட்டில் கணவரும், மனைவியின் தாயாரும் இருந்தனர்.

வீட்டில் இருந்த மருமகன் மாமியாரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தையடுத்து இருபத்தெட்டு வயதுடைய சந்தேக நபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 54 வயதான மாமியார் மருத்துவ பரிசோதனைக்காக ராகம பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments