Thursday, April 25, 2024
Homeஇலங்கை செய்திகள்மனைவியுடன் தொடர்பு வைத்திருந்த நபரை கட்டிவைத்து அடித்த கணவன்!

மனைவியுடன் தொடர்பு வைத்திருந்த நபரை கட்டிவைத்து அடித்த கணவன்!

ரத்னபுர, ஹிதெல்லன பகுதியில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு மரத்தில் கட்டப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிதெல்லன பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு மரத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸ் நிலையத்திற்கு சனிக்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது.

ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் பாதிக்கப்பட்ட நபர் அம்புலன்ஸ் சேவையின் உதவியுடன் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், பலத்த காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், பெண்ணின் கணவர் அவரை அடித்து மரத்தில் கட்டிவைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான 37 வயதுடைய பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments