Thursday, April 25, 2024
Homeஇலங்கை செய்திகள்மண்ணெண்ணெய் ஊற்றி கொடூரமாக எரிக்கப்பட்ட 9 ஏ பெறுபேற்றை பெற்ற பாடசாலை மாணவன்!

மண்ணெண்ணெய் ஊற்றி கொடூரமாக எரிக்கப்பட்ட 9 ஏ பெறுபேற்றை பெற்ற பாடசாலை மாணவன்!

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது “A” பெறுபேறுகளைப் பெற்ற பின்னர் நபர் ஒருவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த மாணவன் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி, அம்பிட்டிய, பல்லேகம பகுதியைச் சேர்ந்த மேற்படி மாணவன் (26) இரவு தனது சிறந்த பெறுபேறுகளை பாட்டிக்கு தெரிவிப்பதற்காக தனது தந்தையுடன் திரும்பிக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி மாணவன் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தீ வைத்த நபரை அடையாளம் காண முடியவில்லை என மாணவனின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அம்பிட்டிய பிரதேசத்தை அச்சுறுத்தும் கும்பல் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர், மேலும் குறித்த கும்பலுக்கு பயந்து மாணவனின் குடும்பத்தினர் தகவலை வெளியிடவில்லை.

இந்த கும்பல் ஹெராயின், ஐஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தும் பலனில்லை என்றும், தகவல் கொடுப்பவர்கள் குறித்து போலீசார் உடனடியாக கும்பலுக்கு தகவல் தெரிவிக்கின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குற்றத்தை செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கண்டி பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமில் ரத்நாயக்க தெரிவித்தார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இதற்கு முன்னர் அம்பிட்டிய பிரதேசத்தில் நபரொருவரை சிலுவையில் அறைந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் எனினும் அவர் உடனடியாக கைது செய்யப்படுவார் எனவும் பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments