Thursday, April 25, 2024
Homeவன்னி செய்திகள்மன்னார் செய்திகள்மட்டக்களப்பில் திருமணமாகி 3 மாதங்கள்; வெளிநாட்டிலிருந்து வந்த இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்..!

மட்டக்களப்பில் திருமணமாகி 3 மாதங்கள்; வெளிநாட்டிலிருந்து வந்த இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்..!

மட்டக்களப்பு தனியார் விடுதிக்கு அருகிலுள்ள வாவியில் தேணியில் மீன்பிடிக்க சென்ற ஒருவர் தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (15) மாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை பாண்டிருப்பு எல்லை வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய உதயராஜன் தனேஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வெளிநாட்டில் இருந்து வந்து கல்லடி பிரதேசத்தில் திருமணம் முடித்து 3 மாதங்களான நிலையில் அடுத்தவாரம் திரும்பி வெளிநாட்டுக்கு செல்ல உள்ள நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவதினமான மாலை மனைவியாரின் உறவினர்களான இருவருடன் சேர்ந்து 3 பேரும் கல்லடி வாவியில் தனியார் விடுதிக்கு முன்னாள் தோணியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தோணி கவிழ்ந்ததில் குறித்த நபர் நீரில் மூழ்கியதை அடுத்து அவரை அங்கிருந்து காப்பாற்றி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற நிலையில் வீதியில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments