Thursday, April 25, 2024
Homeஇலங்கை செய்திகள்மட்டக்களப்பில் காட்டுயானை தாக்கி வயோதிபர் ஒருவர் பலி!

மட்டக்களப்பில் காட்டுயானை தாக்கி வயோதிபர் ஒருவர் பலி!

மட்டக்களப்பில் காட்டுயானை தாக்கி வயொதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சொகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்று அதிகாலை 2.30 மணியளவில் முனைத்தீவு கிராமத்திற்குள் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் முனைத்தீவு பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 69 வயதுடைய காளிக்குட்டி சங்கரப்பிள்ளை என்பவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, காட்டு யானை தாக்கி வீட்டை சேதப்படுத்தியுள்ளதுடன், காட்டு யானையின் அச்சுறுத்தல் காரணமாக இன்று (17) அதிகாலை அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிசார் அப்பகுதிக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டு மரண விசாரணையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போரதீவுப்பற்று வனப்பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த யானைகள் தற்போது மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments