Friday, March 29, 2024
Homeஇலங்கை செய்திகள்மட்டக்களப்பில் கரப்பான் பூச்சியுடன் உணவு பொதி விநியோகம்: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

மட்டக்களப்பில் கரப்பான் பூச்சியுடன் உணவு பொதி விநியோகம்: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

மட்டக்களப்பில் கரப்பான் பூச்சியுடன் சிக்கன் பிரியாணி உணவுப் பொதிகளை விநியோகித்த குற்றத்திற்காக பிரபல உணவு ஒன்றின் உரிமையாளருக்கு 10,000 ரூபா தண்டம் செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் பால் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு நேற்று (9) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கான உத்தரவு உடனடியாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 30ம் தேதி தான். போதனா மருத்துவமனையின் பிரிவு ஒன்றில் பணிபுரியும் தாதியர்கள் விருந்துக்கு சிக்கன் பிரியாணி வாங்கச் சென்று அதை சாப்பிட திறந்து பார்த்தபோது ஒருவரின் மதிய உணவுப் பொதியில் வறுத்த இறைச்சியும் கரப்பான் பூச்சியும் இருப்பதைக் கண்டனர்.

இதனையடுத்து தாதியர்கள் மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

உடனடியாக குறித்த உணவகத்தை சுற்றிவளைத்த பொது சுகாதார அதிகாரிகள், உணவகத்தின் உரிமையாளரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் பால் முன்னிலையில் முன்னிலைப்படுத்தினர்.

இதேவேளை, கடை உரிமையாளருக்கு 10,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments