Friday, April 19, 2024
Homeஇலங்கை செய்திகள்மகளின் திருமணத்திற்கு வாங்கிய நகைகளை திருடி, அடகுவைத்து சூதாட்டத்தில் செலவிட்ட தாய் கைது!

மகளின் திருமணத்திற்கு வாங்கிய நகைகளை திருடி, அடகுவைத்து சூதாட்டத்தில் செலவிட்ட தாய் கைது!

மகளின் திருமணத்திற்காக வாங்கிய நகைகளை ரூ. 400,000 க்கு திருட்டுத் தனமாக அடகு வைத்து, சூதாட்ட விடுதியில் செலவழித்த தாயார் கைது செய்யப்பட்டார்.

மகளின் முறைப்பாட்டையடுத்து பொரளை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகளின் திருமணம் விரைவில் நடக்கவுள்ள நிலையில், அதற்காக நகைகள் வாங்கப்பட்டு அலமாரியில் வைத்திருந்த நகைகளை தாய் திருடியதாக மகள் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த பணத்தை சூதாட்ட விடுதியில் விளையாட பயன்படுத்தியதாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் நவம்பர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments