Friday, March 29, 2024
Homeஇலங்கை செய்திகள்பொலிஸ் அதிகாரியின் விரலை கடித்த பெண் ஒருவர் கைது!

பொலிஸ் அதிகாரியின் விரலை கடித்த பெண் ஒருவர் கைது!

பொலிஸ் அதிகாரியின் விரலை கடித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி, எசல பெரஹர உற்சவத்தின் போது கடமையாற்றிய பேராதனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரிமீது, ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதல் நடத்திய குழுவில் இருந்த பெண் ஒருவர் பொலிஸ் பொறுப்பதிகாரியின் கை விரலை கடித்ததால், கண்டி தேசிய வைத்தியசாலையில் அவருக்கு இரண்டு தையல்கள் போடப்பட்டுள்ளன.

குடிபோதையில் தவறாக நடந்து கொண்ட ஒரு குழுவில் இருந்த பெண்ணும் மற்றுமொரு நபரும் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் பேராதனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் சரத் விஜேசிங்கவே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் , பெண்ணுடன் மேலும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் கைதான சந்தேகநபர்கள் கண்டி, அகவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments