டீசல் விலை குறைந்தாலும் பஸ் கட்டணம் குறைக்கப்படாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டீசல் விலை கணிசமாக குறைக்கப்படாததால் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் ஆட்டோ டீசலின் விலையை 10 ரூபாவினால் குறைக்க ஸ்ரீலங்கா பெற்றோலியம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி.
அதன்படி, ஒரு லிட்டர் ஆட்டோ டீசலின் புதிய விலை ரூ.420.
டீசல் விலை குறைப்பு காரணமாக பஸ் கட்டணங்கள் திருத்தப்படுமா என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவிடம் “அத்த தெரண” வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.