தேசிய சாதனையை முறியடிக்கும் வலி. வடக்கு தெல்லிப்பளை பிரதேசத்திற்கு பெருமை சேர்த்த மகாஜனக் கல்லூரி மாணவிகளுக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகத்தினால் அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.
இந்த கௌரவிப்பு நிகழ்வு இன்று இடம்பெற்றது.
தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் 20 வயதுக்குட்பட்ட மற்றும் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி, இலங்கையின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் இடையிலான 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியில் தேசிய மட்டத்தில் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவஸ்ரீ, உதவி பிரதேச செயலாளர் கே.சரோஜினி, கல்லூரி அதிபர்கள், கல்விமான்கள் என பலரும் கலந்துகொண்டனர்.