Thursday, March 28, 2024
Homeஇலங்கை செய்திகள்புத்தளம் கற்பிட்டி சின்னக்குடியிருப்புப் பகுதியில் பெருமதியான மர்மபொருளுடன் பொலிஸாரிடம் சிக்கிய இரண்டு பேர்!

புத்தளம் கற்பிட்டி சின்னக்குடியிருப்புப் பகுதியில் பெருமதியான மர்மபொருளுடன் பொலிஸாரிடம் சிக்கிய இரண்டு பேர்!

புத்தளம் கப்பிட்டி சேரி பகுதியில் 2 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கப்பிட்டி பொலிஸாரால் இன்று (09-01-2023) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் ஐஸ் போதைப்பொருள் கடத்தப்படுவதாக பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்ட போது ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது இரண்டு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் கற்பிட்டி துரையடி மற்றும் மட்டக்குழி பிரதேசங்களைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் பிரபல போதைப்பொருள் வியாபாரி எனவும், பல தடவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் எனவும் கப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி 2 கோடிக்கு மேல் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள், 18000 பணம், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அவர்கள் கடத்த முயன்ற முச்சக்கரவண்டி ஆகியவற்றை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments