Tuesday, April 23, 2024
Homeஅரசியல்செய்திபுதுச்சேரியில் புயலில் அடித்து செல்லப்பட்ட வீடுகளுக்கு ரூ 15,0000 நிவாரணம் அளிக்க வேண்டும்… அ.தி.மு.க MLA...

புதுச்சேரியில் புயலில் அடித்து செல்லப்பட்ட வீடுகளுக்கு ரூ 15,0000 நிவாரணம் அளிக்க வேண்டும்… அ.தி.மு.க MLA கோரிக்கை…

புதுச்சேரி பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் புயல் கனமழையால் கடலில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகளுக்கு 15 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக புதுச்சேரி அரசு வழங்க வேண்டும் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் மாண்டஸ் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் பார்வையிட்டு, வீடு இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார்.அம்மா பிறந்தநாளில் 51 ஜோடிகளுடன் ஆர்.பி.உதயகுமார் அவர்களின் மகளுக்கும் திருமணம்
பின்னர் அன்பழகன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: “கடற்கரையில் கல் கொட்டுதல் சம்பந்தமாக சரியான புரிதல் இல்லாமல் தலைமை செயலகம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் கற்களை கொட்டி செயற்கை மணற்பரப்பை உருவாக்குவதால் அதற்கு அடுத்துள்ள பல மீனவ கிராமங்கள் கடல் சீற்றத்தால் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.


புதுச்சேரியில் மாண்டஸ் புயலால் கடலில் அடித்து செல்லப்பட்ட வீடுகளுக்கு 15 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹைலைட்ஸ்:
புதுச்சேரி பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் புயல் கனமழையால் கடலில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்
15 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக புதுச்சேரி அரசு வழங்க வேண்டும்
அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தல்
ஹைலைட்ஸ் படிக்க – டவுண்லோட் ஆப்
மாண்டஸ் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அதிமுக அன்பழகன் பார்வை
மாண்டஸ் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அதிமுக அன்பழகன் பார்வை


புதுச்சேரி பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் புயல் கனமழையால் கடலில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகளுக்கு 15 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக புதுச்சேரி அரசு வழங்க வேண்டும் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் மாண்டஸ் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் பார்வையிட்டு, வீடு இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

அம்மா பிறந்தநாளில் 51 ஜோடிகளுடன் ஆர்.பி.உதயகுமார் அவர்களின் மகளுக்கும் திருமணம்
பின்னர் அன்பழகன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: “கடற்கரையில் கல் கொட்டுதல் சம்பந்தமாக சரியான புரிதல் இல்லாமல் தலைமை செயலகம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் கற்களை கொட்டி செயற்கை மணற்பரப்பை உருவாக்குவதால் அதற்கு அடுத்துள்ள பல மீனவ கிராமங்கள் கடல் சீற்றத்தால் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த திமுக, காங்கிரஸ் ஆட்சியில் இவ்வாறு சரியான திட்டமிடுதல் இன்றி சில இடங்களில் கொட்டப்பட்ட கற்களால் கனக செட்டிகுளம், பிள்ளைச் சாவடி, காலாப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கடல் அரிப்பு ஏற்படுகிறது. நேற்று பெய்த பெருமழையிலும் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கடலோடு அடித்து செல்லப்பட்டன. வீடு, வாசல், வீட்டு உபயோக பொருட்கள், மீன்பிடி சாதனங்கள் உள்ளிட்ட தனது உடைமைகளை முழுமையாக இழந்து நிற்கதியில் பல மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.கடலில் மூழ்கிய ஒவ்வொரு வீட்டிற்கும் உரிய நிவாரணத் தொகை வழங்கப்படும் என மாண்புமிகு முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இயற்கை பேரிடர் நிவாரண நிதியிலிருந்து முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 15 லட்சமும், பாதியாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 8 லட்ச ரூபாய் இழப்பீடாக அரசு வழங்கும் அறிவிப்பை மாண்புமிகு முதல்வர் வெளியிட வேண்டும். அதேபோன்று வலை,படகு உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள் சேரமடைந்து பாதிக்கப்பட்டிருந்தால் அதற்குரிய நிவாரண உதவியை கணக்கெடுத்து கொடுத்து வழங்க வேண்டும் இவ்வாறு கூறினார்.இந்நிகழ்ச்சியில் மாநில கழக அவைத் தலைவர் அன்பானந்தம் மாநில கழக துணை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜாராமன், மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணை செயலாளர் நாகமணி, புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழகன் உடையார், மேற்கு மாநில அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி, மணவெளி சட்டமன்றத் தொகுதி செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments