நேற்றிரவு கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதத்தில் பேராதனை பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிலிமத்தலாவ, கங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது பேரதானை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.